இவங்க நம்ம லிஸ்ட்டுலயே இல்லயே… மீண்டும் பாய்ந்த சுசித்ரா

இவங்க நம்ம லிஸ்ட்டுலயே இல்லயே… மீண்டும் பாய்ந்த சுசித்ரா
  • PublishedSeptember 3, 2024

தமிழில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான நடிகர் ஜீவாவின் “கோ” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட் உலகில் அறிமுகமான நடிகை தான் ரீமா கல்லிங்கல்.

தமிழில் யுவன் யுவதி மற்றும் சித்திரை செவ்வானம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும், மலையாள திரை உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக பயணித்து வருபவர் ரீமா கல்லிங்கல். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரீமா மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா.

அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய பாடகி சுசித்ரா, பிரபல மலையாள திரைப்பட நடிகை ரீமா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் இணைந்து, தங்கள் வீட்டிலேயே போதை பார்ட்டிகளை நடத்தியதாக கூறியிருந்தார்.

மேலும் கேரளாவில் பல இளம் நடிகைகள் ரீமா நடத்தும் இந்த போதை பார்ட்டிகளில் கலந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள ரீமா,

“பாடகி சுசித்ரா ஏன் இப்படிப்பட்ட ஒரு செய்தியை பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லாமல் வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும் அவர் இப்படி செய்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் அவதூறாக அவர் பேசிய நிலையில், கண்டிப்பாக இந்த விஷயத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன்.

இப்பொழுது சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்திருக்கிறோம், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்தையும் இனி சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ரீமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *