காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக…தமன்னா இப்படி கூறியுள்ளார்

காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக…தமன்னா இப்படி கூறியுள்ளார்
  • PublishedMarch 19, 2025

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியான நட்சத்திரமாக இருக்கும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வைரலானது. மேலும் திருமணம் எப்போது என்கிற கேள்வியும் இவர்கள் இருவர் இடையே கேட்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவித்துவிட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. காதல் தோல்விக்காக தங்களது நண்பர்களுக்கு தனித்தனியாக இருவரும் விருந்து வைத்தார்கள் என்றும் தகவல் கூறினார்கள்.

காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ” வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என அவர் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக தமன்னா இப்படி கூறியுள்ளார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *