இன்டர்வெலில் ஒளிபரப்பான சமந்தாவின் அந்த காட்சி.. உடனே வெளியேறிய நாகசைத்தன்யா

இன்டர்வெலில் ஒளிபரப்பான சமந்தாவின் அந்த காட்சி.. உடனே வெளியேறிய நாகசைத்தன்யா
  • PublishedAugust 28, 2023

குஷி படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் நாக சைத்தன்யா கடுப்பாகி எழும்பி சென்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்தை பெற்றுவிட்டனர்.

விவாகரத்திற்கு பின் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, அதில் இருந்து வெளிவர கோவில் கோவிலாக சென்றார். இதையடுத்து, படங்களில் மீது கவனத்தை திருப்பிய சமந்தா, யசோதா, சாகுந்தலம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தார்.

இந்த நேரத்தில் தான் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நோய்க்கு வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். தற்போது, இவர் விஜயதேவர கொண்டாவுடன் இணைந்து குஷிப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா, பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, இன்டர்வெலில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி படத்தின் டிரைலர் ஒளிபரப்பாகி உள்ளது. இதைப்பார்த்து கடுப்பான நாக சைதன்யா தியேட்டரை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

குஷி படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இதைப்பார்த்து கடுப்பாகி விட்டாரா இல்லை, வேறு ஏதேனும் வேலை இருந்ததா என்று தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *