வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பெரும் பரபரப்பு

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பெரும் பரபரப்பு
  • PublishedSeptember 20, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இன்று ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 முதல் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக, டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

500-க்கும் மேற்பட்டோர் கைகளில் டிக்கெட் வைத்திருந்த போதும், அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் காசு செலவு செய்து டிக்கெட் வாங்கியும் அவர்களை உள்ளே விடாதது பலரை கோவத்தில் ஆழ்த்தியது. இதனால் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

https://x.com/OnlineRajiniFC/status/1837126513139011699

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *