சபை நாகரிகம் இன்றி பேசிய பிரபலம் : ராதிகா கொடுத்த பதிலடி!

சபை நாகரிகம் இன்றி பேசிய பிரபலம் : ராதிகா கொடுத்த பதிலடி!
  • PublishedJuly 8, 2023

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளில் எதைவேண்டுமானாலும் பேசிவிடலாம் என்ற மனப்பான்மை அதிகரித்துள்ளது.

அவ்வாறு நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா மோத்வானியின் கால்களை தடவி பார்க்க ஆசைப்பட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் சதிஷ், ராதிகாவிடம் பேசியிருக்கும் விடயம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நடிகர்  சதீஷ்  ஜெரி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்,  ஆர்யா,  சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய  அவர் நடிகை ராதிகாவிடம்,  சரத் குமாரை பதம் பார்த்தா ஓகே வா? லவ் டுடே படத்தில் இது போன்ற வசனம் இருந்தது. அதை பார்க்கும் போது எப்படி இருந்தது என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ராதிகா  ‘நான் அவருடன் வாழ்ந்து கொண்டு இருக்கேன் என்று கூறியிருப்பார். தற்போது இவரின் இந்த பேச்சுக்கு மேடை நாகரிகம் இல்லாமல் இப்படி பேசுகிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *