விஜய்யின் பெயரை சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்.. அப்படி என்ன செய்தார்?

விஜய்யின் பெயரை சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்.. அப்படி என்ன செய்தார்?
  • PublishedJuly 21, 2023

விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் இறங்க படு பயங்கரமாக வேலை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் விஜய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகி திருச்சி செந்தில் கருமண்டபம் சிங்கராயர் என்ற பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார்.

அப்போது போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த ஸ்பா சென்டர் உரிமை வாங்காமல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த மசாஜ் சென்டரில் அந்தரங்கத் தொழில் நடத்தி இருக்கிறார் திருச்சி செந்தில்.

மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.

இந்த விஷயம் அறிந்த திருச்சி செந்தில் தலைமறைவு ஆகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சமீபகாலமாக விஜய் அரசியலின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கூட தொடர்ந்து இரண்டு நாட்கள் பனையூருக்கு விஜய் சென்றிருந்தார்.

இப்படி விஜய் பயங்கரமாக அரசியலுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திருச்சி மக்கள் நிர்வாகியின் மாவட்ட பொருளாளராக இருக்கும் செந்தில் இவ்வாறு அந்தரங்க தொழில் செய்தது தளபதி பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவிலும் செந்தில் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *