சிக்கலில் மாட்டிக்கொண்ட உதயநிதி : திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை!

சிக்கலில் மாட்டிக்கொண்ட உதயநிதி : திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை!
  • PublishedJune 28, 2023

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,  வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்றதால் அரசியல் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தினால் உதயநிதிக்கு மிகப் பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. அதாவது,  கமலின் தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் சாதிய படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதில் இடம்பெறும் இசக்கியை வைத்து தான் மொத்த கதையையும் எடுத்துள்ளாராம். இவர் இந்த விஷயம் சொன்னதிலிருந்தே இணையத்தில் மிகப்பெரிய பிரளயமே ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில் மாமன்னன் படத்தை திரையிட்டால் தேனி வெற்றி திரையரங்கில் தாக்குதல் நடத்தப்படும் என சில கட்சியினர் எச்சரித்து திரையரங்கு மேலாளரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர்.

பொதுவாக பிரச்சனை உள்ள படங்களை உதயநிதி தலையிட்டு தான் வெளியிடுவார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸில் சிக்கல் இருந்தது. இப்போது அதை உதயநிதி விநியோகம் செய்கிறார்.

மற்றொருபுறம் கிடப்பில் போட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போது நடப்பதற்கு காரணமும் இவர்தான். ஆனால் இயக்குனரால் இப்போது உதயநிதியின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *