விஜயகாந்த் நலம்பெற விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்…

விஜயகாந்த் நலம்பெற விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்…
  • PublishedDecember 5, 2023

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர்.

திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

இதேபோல் நாகையில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

இந்நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருள்மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகர், பூமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *