”ஏதாவது கதை எழுதுங்கள், ஆனால் அது மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்கட்டும்” – அறிவுறை கூறிய கீர்த்தி!

”ஏதாவது கதை எழுதுங்கள், ஆனால் அது மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்கட்டும்” – அறிவுறை கூறிய கீர்த்தி!
  • PublishedJuly 8, 2023

விஜய் சேதுபதி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெனா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கீர்த்தி குறித்து பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதாவது வாரிசு நடிகர் ஒருவர் கீர்த்தியிடம் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், கட்ட இடங்களில் தொடுவதாகவும் கீர்த்தி கூறியிருப்பதாக தகவல் ஒன்று பரவியது. இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி பேசிய கீர்த்தி ஷெட்டி,  பிரபல நடிகரின் மகான் மகனால் எனக்கு தொல்லைகள் இருப்பதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல்கள் வெளியானது. மேலும் அந்த நபர் செல்லும் இடங்களுக்கு என்னை வருமாறு வற்புறுத்துவதாகவும் என்று கூறப்பட்டது. இது முற்றிலும் பொய்யான தகவல்.

இந்த மாதிரியான செய்திகளை பரப்பாதீர்கள். ஏதாவது கதை எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் என்று கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *