மனைவிக்காக மும்பையில் செட்டிலான சூர்யா!

மனைவிக்காக மும்பையில் செட்டிலான சூர்யா!
  • PublishedMarch 18, 2023

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 42 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில்  ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அழுத்தமான ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யா 5 வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை. இருப்பினும் சூர்யாவின் அம்மா,  அப்பா மற்றும் தம்பி குடும்பத்துடன் இணைந்த வாழும் ஜோதிகாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மும்பையில் பல கோடி செலவில் புதிய வீடொன்றை நிர்மாணித்து வருகிறார்.

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் 16வது ஃப்ளோரை ஒன்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட் அளவுடன் உள்ள இடத்தை வாங்கி இருக்கிறார். அந்த அளவிற்கு மும்பையில் பிசினஸ் இருப்பதால் மனைவியும் அங்கே இருக்க ஆசைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *