அஜித்துக்காக ஷாலினி விடுத்த உருக்கமான வேண்டுகோள்.
2000ஆம் ஆண்டு அஜித்குமார் மற்றும் ஷாலினி திருமணம் செய்து கொண்டதையடுத்து ,திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய ஷாலினி, குடும்பம் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார். அஜித்தின் ரேஸிங் பயணங்களிலும் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் ஷாலினி.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பேசியபோது , தனது குழந்தைகள் இதுவரை தன் படங்களை பார்க்கவில்லை என்றும், ‘அலைபாயுதே’ படத்தை பார்க்க வேண்டும் என்று மகள் சமீபத்தில் கேட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது துபாயில் கார் ரேஸில் பங்கேற்றுள்ள தன்னுடைய கணவர் அஜித்துக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.