நடிகை ராதிகா சொன்ன உண்மை.
பிப்ரவரி 27ஆம் திகதி வெளியான தாய் கிழவி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அதில் வெகு நாட்களுக்கு பின்பு, ஒரு நல்ல படத்தில் நடித்துள்ளது சந்தோஷமாக உள்ளது. இன்னும் நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறேன். லக்கி பாஸ்கர் பட இயக்குநர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஒரு படம் நடிக்கிறேன்.” எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சூர்யா 46 படத்தில் ராதிகா நடிக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுடன் ராதிகா மீண்டும் இணையும் படம் எப்படி இருக்கும்? எந்த வகை கதாபாத்திரத்தில் அவர் தோன்றப் போகிறார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.