500 கோடியெல்லாம் போதாதாம் : உதயநிதியிடம் தஞ்சமடையும் லியோ குழுவினர்!

500 கோடியெல்லாம் போதாதாம் : உதயநிதியிடம் தஞ்சமடையும் லியோ குழுவினர்!
  • PublishedMarch 30, 2023

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த மாதத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தளபதி சோலோவாக மாஸ் காட்டப்போகிறார்.

ஏற்கனவே இந்த படம் 500 கோடி பிரீ பிசினஸ் ஆன நிலையில், தற்போது தயாரிப்பாளர் லலித் குமார், தமிழகத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதியிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தற்போது படு பயங்கரமாக லியோ படத்தின் பிசினஸ் வேலைகளை பார்த்து வருகிறது படக்குழு. 500 கோடிகளுக்கு மேல் வசூலை பார்த்து விட வேண்டும் என்று ஒரு பெரிய பிளான் போய்க்கொண்டிருக்கிறது. லலித் இந்த படத்தின் வியாபார யுக்திகளை கையாண்டு வருகிறார்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் 85 சதவீதம் தியேட்டரிக்கள்  ரெட் ஜெயண்ட் மூவிஸ் இடம் தான் இருக்கிறது. அதனால் நிச்சயமாக இந்த படத்தை உதயநிதி அண்ட் கோ தான் தமிழகத்தில் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *