ஒன்றரை மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி… பிரஷாந்த் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

ஒன்றரை மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி… பிரஷாந்த் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
  • PublishedApril 8, 2024

தமிழ் சினிமாவில் 90களில் தன் நடிப்பாலும் அழகாலும் கவர்ந்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

இடையில் அவரது திருமணம் வாழ்க்கை பிரச்சனையில் முடிய 5 ஆண்டுகள் வழக்குகளை சந்தித்து வந்தார்.

பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறித்து அவரது தந்தை தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தொகுப்பாளினி அவரிடம், பிரசாந்தின் Career-ஆ அவர் அப்பா ஸ்பாயில் பண்ணிட்டாரு என்று கேள்வி எழுந்தது என்று கேட்டதும் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளார் தியாகராஜன்.

அதன்பின் பேசிய தியாகராஜன், ஆமாம், எனக்கு மிகப்பெரிய வருத்தம் அவன் கல்யாண விசயம் தான். நல்ல குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணமாகி, திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என்று தெரியவில்லை, கல்யாணமான ஒன்றரை மாசத்தில் அந்த பொண்ணு வீட்டைவிட்டு போய்டுச்சி, அதன்பின் தொடர்பில் இல்லை. வரதட்சணை கேட்கிறோம் என்று சொல்லி எங்கள் மீது வழக்கு போட்டாங்க. அதோட 5 வருஷம் பல நீதிமன்றம் சென்றார்கள்.

இதனால் 5 வருஷம் மன உளைச்சலில் இருந்தது எனக்கு மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் கண்டிப்பா அவனுக்கு கல்யாணம் பண்ணணும், அது என் கடமை என்று எமோஷ்னலாக கூறியிருக்கிறார் பிரசாந்த் தந்தை தியாகராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *