தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்திருக்கும் ‘ஒரு நொடி’

தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்திருக்கும் ‘ஒரு நொடி’
  • PublishedMay 3, 2024

கும்மிய இருட்டில் கிடைத்த மெழுகுவர்த்தி வெளிச்சம் போல் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் படம் தான் ஒரு நொடி.

இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார், நிகிதா, எம் எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

வாங்கிய கடனை கொடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் எம் எஸ் பாஸ்கர் காணாமல் போனதை அடுத்து ஹீரோ தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.

அதே நேரத்தில் நிகிதா என்னும் இளம் பெண் எதிர்பாராத விதத்தில் கொலை செய்யப்படுகிறார். இந்த இரு வேறு வழக்கை விசாரிப்பது தான் இந்த படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் யார் என்ன செய்திருப்பார் என்று கொஞ்சம் கூட கெஸ் பண்ண முடியாத திரைக்கதை அமைப்பு.

தமிழ் சினிமா ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் திரில்லர் கதை. ஆரம்பத்தில் படம் ரிலீஸ் ஆனது வெளியில் தெரியாத அளவுக்கு இருந்தது. தற்போது பெரிய தியேட்டர்களில் காட்சிகளை அதிகரிக்கும் அளவுக்கு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருக்கிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஷ் ரொம்பவும் மனம் குளிர்ந்து போயிருக்கிறார். இயக்குனரை பாராட்டும் விதத்தில் அவருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். கடந்த வருடம் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற போர் தொழில், டாடா, குட் நைட் படங்களின் வரிசையில் தற்போது இந்த படம் இணைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *