கோலிவுட்டை காப்பாற்றினார் சுந்தர். சி ; பட்டையை கிளப்பும் பேய் படம்

கோலிவுட்டை காப்பாற்றினார் சுந்தர். சி ; பட்டையை கிளப்பும் பேய் படம்
  • PublishedMay 3, 2024

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை.

மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.

இந்த சூழலில் இப்போது சுந்தர்.சி கோலிவுட்டை மீட்டு எடுத்து இருக்கிறார் என்ற தகவலை ஏற்க்கொண்டுதான் ஆக வேண்டும்.

அதாவது இன்று சுந்தர். சியின் இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருக்கிறது. அதிகபட்ச ஹாரர், சில சில காமெடி என சுந்தர் சி இந்த படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார்.

இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் டொவினோ தாமஸின் நடிகர் படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் இப்போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆகையால் அரண்மனை 4 படத்தில் தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ‌

மேலும் அரண்மனை படம் முதல் நாளே கிட்டத்தட்ட 3 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இப்போது அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் டபுள் மடங்காகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *