வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் விருந்து வைத்த ஆண்டவர் – குண்டை போடு சுசி

வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் விருந்து வைத்த ஆண்டவர் – குண்டை போடு சுசி
  • PublishedMay 15, 2024

பின்னணி பாடகி சுசித்ரா தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். அதற்கு காரணம் சுச்சி லீக்ஸ் என்று கூறப்படுகிறது.

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் இப்போது தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சுசித்ரா அளித்த பேட்டி மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.

அதில் சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். அதில் என்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டார்கள் என சொல்லி ஏகப்பட்ட தகவல்களை கூறினார். மேலும் தனது முன்னாள் கணவர் கார்த்தி தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறைக்குள் சென்றார்கள் என்றும் கூறியிருந்தார்.

அந்தப் பேட்டியில் கமல் ஹாசனின் பர்த் டே பார்ட்டி குறித்தும் பேசியிருக்கிறார் சுசித்ரா. அவர் பேசுகையில், “எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினாலே நாலு லைன் கொக்கைன் அடித்துவிட்டுத்தான் வருவார்.

கமல் ஹாசனின் பர்த் டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் வைத்து கொக்கைனை கொண்டு வருவார்கள். அது வேண்டாம் என்று நான் சொன்னதால்தான் என்னை வைத்து செய்கிறார்கள். கோலிவுட்டில் போதை கலாசாரம் சர்வசாதாரணமாக இருக்கிறது” என்று கூறி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *