150 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிறது “தனுஷ் 55”

நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தி படமான ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கிர்த்தி சனோன் நாயகியாக நடிக்கிறார். இதற்கிடையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது.
இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகிறது என்கிறார்கள்.