நடிப்பை மட்டுமே போகஸ் பண்ணும் நடிகை மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து தெலுங்கில் நானி உடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இதில் “திருமணம் செய்துகொள்வதும், தாயாக மாறுவதும் சிறு வயதிலிருந்தே எனது கனவு ஆகும். இருப்பினும் தனது கவனம் முழுவதும் தற்போது திரைத்துறையில் மட்டுமே உள்ளது” என கூறியுள்ளார்.
