சினிமாவில் சம்பளத்தை உயர்த்திய நடிகைகள் : முதலிடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா!

சினிமாவில் சம்பளத்தை உயர்த்திய நடிகைகள் : முதலிடத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா!
  • PublishedJune 9, 2023

சினிமாவில், ஆரம்ப காலம் தொட்டே நடிகர்களுக்கு ஒரு சம்பளமும், நடிகைகளுக்கு ஒரு சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிக்கு ஏற்ற மாதிரி சில நடிகர், நடிகைகளின் சம்பளமும் வேறுப்படும்.

இந்நிலையில், தற்போது நடிகைகளும், நடிகர்களுக்கு இணையாக சம்பளத்தை வாங்க ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில், நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகையாக பிரியங்கா சோப்ரா காணப்பட்டார்.

இப்போது பல நடிகைகளும் அவரை பின்பற்றி செயல்பட ஆரம்பித்து விட்டனர். இவரை அடுத்து லேடி சூப்பர் ஸ்ரார் நயன்தாரா, 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.

இவரைத் தொடர்ந்து முன்னணி நடிகையான சமந்தா 8 கோடி ரூபாய் வரை பெற்றார். தற்போது த்ரிஷாவும் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். தற்போது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை த்ரிஷா நம்பர் வன் நடிகையாக வலம் வருகிறார். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து  ஐஸ்வர்யா ராஜேஷ்,  ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் போன்ற அனைத்து ஹீரோயின்களும் ஏற்கனவே இவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து இரண்டு கோடி வரை அதிகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *