சர்ச்சை நபர்களை அண்டாத அஜித் : ஆனால் தற்போது இப்படி ஒரு நிலைமையா?
![சர்ச்சை நபர்களை அண்டாத அஜித் : ஆனால் தற்போது இப்படி ஒரு நிலைமையா?](https://cinemazda.com/wp-content/uploads/2023/06/ajith-1.jpg)
துணிவு படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்த அஜித்தால், அதற்கு பிறகு புதிய திரைப்படம் பற்றிய எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்க முடியவில்லை. பொதுவாகவே இவருடைய கேரக்டர் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருப்பதே இவருக்கு பிடிக்கும்.
அத்துடன் இந்த நபர் கூட சேர்ந்தால் பிரச்சனை வரும் அதனால் நமக்கு பெரிய துன்பம் என்று தெரிந்தாலே அவரை விட்டு ஒதுங்கி விடக் கூடியவர்.
அதை இத்தனை வருட காலமாக கடைப்பிடித்து வந்து இருக்கிறார். ஆனால் தற்போது இவருக்கு பிரச்சனை இல்லை என்றாலும் இவர் கூட்டணி வைக்கும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து பிரச்சனை வந்துள்ளது.
அங்கு வேலை செய்யும் முக்கிய நபர்களை டார்ச்சர் செய்து ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை பற்றி பல தகவல்களை லைக்காவிடமிருந்து அமலாக்கத்துறை கரந்துள்ளது. இதனால் லைக்கா நிறுவனத்திற்கும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது.
இதனால் அஜித்துக்கு என்ன பிரச்சனை என்றால் இவர்களால் இவருடைய பெயரும் கொஞ்சம் டேமேஜ் ஆகி கொண்டு வருகிறது.