திருமணம் குறித்து பாலா கூறிய சூப்பர் நியுஸ்

திருமணம் குறித்து பாலா கூறிய சூப்பர் நியுஸ்
  • PublishedMay 13, 2024

கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு சின்னத்திரை நடிகர் பாலா ருசிகர அப்டேட்டை கொடுத்துள்ளார்.

கடலூர் அருகேயுள்ள தாழங்குடாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாலா மற்றும் நடிகை அஸ்மிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

சிறுவர், சிறுமியருக்கு பள்ளி நோட்டுப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை அவர்கள் வழங்கினர். பின்னர் மஸ்காரா பாடலுக்கு நடிகை அஸ்மிதா ஸ்டைலாக நடனமாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தத நடிகர் பாலா,

இதுவரை இல்லாதவர்களுக்காக, தாம் சம்பாதித்த பணத்தில் இருந்து உதவிகள் செய்து வந்ததாகவும், இனி உதவி செய்யவே சம்பாதிக்க இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டே இருப்பேன் என்றும் நடிகர் பாலா கூறினார்.

மேலும் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, “திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்களே. காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் என்னுடைய திருமணம். ஆனால் எப்பொழுது என்று தேதியை பின்பு அறிவிப்பேன்” என்று கலகலப்பாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *