பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த பாவனா : வெளியாகிய சூப்பர் அப்டேட்!
![பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த பாவனா : வெளியாகிய சூப்பர் அப்டேட்!](https://cinemazda.com/wp-content/uploads/2023/06/பாவனா-.jpg)
மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழில் ஜெயம் கொண்டான், தீபாவளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்படி என்னதான் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டாலும், இவர் அனுபவித்த துன்பங்களும் ஏராளம்.
அதாவது பாவனா, கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளானார். இதற்கு மலையாள சினிமா நடிகர் திலீப் தான் காரணம் என குற்றச்சாட்டீ கோர்ட், கேஸ் என ஓடித்திருந்தார்.
தற்போது பாவனாவிற்கு 37 வயதாகுகிறது. இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான தி டோர் என்ற படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பல துன்பங்களைக் கடந்து மீண்டும் சினிமாவிற்குகள் நுழைந்துள்ள பாவனா பீனிக்ஸ் பறவைபோல் சுடர் விட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.