இளையராஜாவின் இசைக்குயில் உயிரிழந்தது… கொழும்பு இசை நிகழ்ச்சியில் நடக்கப்போவது என்ன?
![இளையராஜாவின் இசைக்குயில் உயிரிழந்தது… கொழும்பு இசை நிகழ்ச்சியில் நடக்கப்போவது என்ன?](https://cinemazda.com/wp-content/uploads/2024/01/dfsa-down-1706199412.jpg)
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
இவர் கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெரும் இசைநிகழ்ச்சிக்காக இளையராஜா நேற்று (24) மாலை இலங்கை வந்திருந்தார்.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இளையராஜாவுக்கு பேரிடியாக இந்த செய்தி வந்துள்ளது. இதனால் குறித்த இசை நிகழ்ச்சி நடைபெறுமா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.