“இப்படி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” படத்தின் முதல் விமர்சனம்

“இப்படி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” படத்தின் முதல் விமர்சனம்
  • PublishedAugust 12, 2024

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

அஜய் ஞானமுத்து விக்ரமனை வைத்து கோப்ரா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து தற்போது டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், படத்தின் முதல் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வாவ்… டிமாண்டி காலனி 2 என்ன ஒரு அருமையான திரைக்கதை, ஆகஸ்ட் 15ந் தேதி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையை பற்றி தான் பேசப்போகிறார்கள்.

மகாராஜாவுக்கு பின் டிமாண்டி காலனி 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதில் நாங்கள் மிகவும் லக்கி என குறிப்பிட்டுள்ளார். படம் பார்த்த மற்றொருவர், டிமாண்டி காலனி 2 மாதிரி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இரண்டரை மணிநேரமும் என் போனை நான் எடுக்கவில்லை, சீட் நுனியில் அமர்ந்து தான் படம் பார்த்தேன் என்று பகிர்ந்துள்ளார்.

ஆகஸ்ட் 15ந் தேதி சுகந்திர தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படமும், கீர்த்தி சுரேஷின் ரகு தாதா திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் டிமாண்டி காலனி 2 வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *