சுயரூபம் தெரியாமல் சிக்கிக்கொண்ட இயக்குனர் : குழப்பத்தில் தனுஷ்!

சுயரூபம் தெரியாமல் சிக்கிக்கொண்ட இயக்குனர் : குழப்பத்தில் தனுஷ்!
  • PublishedApril 17, 2023

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். அந்தப் படத்தில் வடிவேலுவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

ஆனால் தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் படிக்காதவன் பட ஷூட்டிங்கில் நடந்த பிரச்சனைதான்.

ஆனால் இப்போது மாரி செல்வராஜ் இப்படத்தில் வைகை புயல் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

தனுஷ் மறுப்பு சொல்லியும் கூட கதை பற்றி எடுத்துச் சொல்லி வடிவேலு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். அதன் பிறகு தான் இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வடிவேலுவின் சுயரூபம் தெரியாமல் இயக்குனர் சிக்கியிருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *