நடிகர் ராதாரவி மீது வழக்கு பதிவு செய்த டப்பிங்க ஆர்டிஸ்ட்!

நடிகர் ராதாரவி மீது வழக்கு பதிவு செய்த டப்பிங்க ஆர்டிஸ்ட்!
  • PublishedApril 24, 2023

சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக ராதாரவி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சங்கீதா பொலிஸ் நிலையத்தில்முறைபாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் ராதாரவி ,  இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல்,  323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்,  506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *