நான் திருப்பதியில் இருக்கிறேன் : தெலுங்கில் பேசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!

நான் திருப்பதியில் இருக்கிறேன் : தெலுங்கில் பேசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!
  • PublishedMay 29, 2023

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

இதன்பிறகு படிப்படியாக முன்னேறிய அவர், தற்போது வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறார்.  பொதுவாகவே நடிகைகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது இவர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

திருப்பதி கோவிலுக்கு வேண்டுதலுக்காக சென்றிருந்த கீர்த்தி சுரேஷ் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். முழுக்க முழுக்க தெலுங்கில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் நிருபர் ஒருவர் தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு நான் திருப்பதியில் இருக்கிறேன் என்று ரொம்பவும் நக்கலாக பதில் சொல்லி சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் இவர்.

இவர்களைப் போன்ற ஒரு சில நடிகர்,  நடிகைகள் தங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை எளிதாக மாற்றிக் கொள்கிறார்கள். எந்தெந்த மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அந்த ரசிகர்களை கவரும் வகையில் மேடைகளிலும்  பொது நிகழ்ச்சிகளிலும் பேசுகிறார்கள்.

இப்போது திருப்பதியில் இருப்பதால் தமிழில் பேச முடியாது என்று சொன்ன கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தின் பிரமோஷனுக்காக எப்படி எல்லாம் பேசுவார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *