ஜெய்லர் திரைப்படத்தின் கதை இந்த ஹீரோவுடையதா?

ஜெய்லர் திரைப்படத்தின் கதை இந்த ஹீரோவுடையதா?
  • PublishedMay 14, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெய்லர். நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் காட்சிகள் பெரும்பாலும் ஜெயிலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரிகிறது. தற்போது இந்தப் படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் படத்தின் கதைக்காக இயக்குனர்   நெல்சனுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்திருப்பதே நடிகர் சிவகார்த்திகேயன் தான்.

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் நீண்ட வருட நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவதற்கு சிவா உதவி இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய அப்பா தாஸை பற்றி பல மேடைகளில் பேசி இருக்கிறார். அவருடைய கதையை படமாக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ஆசையாக இருந்திருக்கிறது.

இதை நெல்சனிடம் சொல்லி நேரம் வரும்பொழுது இந்த கதையை நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனுக்கு கால்ஷீட் கொடுக்கவே நெல்சன் எந்த கதையை எடுப்பது என்று திணறி இருக்கிறார்.

இறுதியாக சிவகார்த்திகேயனின் சம்மதத்தோடு அவருடைய அப்பாவின் கதையை ரஜினிகாந்திடம் கூறி சம்மதம் வாங்கி இயக்கி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *