தனுஷின் மும்பை விஷிட்டிற்கான காரணம் இதுதானா?

தனுஷின் மும்பை விஷிட்டிற்கான காரணம் இதுதானா?
  • PublishedJune 3, 2023

நடிகர் தனுஷ்,  தாடி மற்றும் மீசையுடன் மும்பை விமான நிலையத்தில் இருப்பும் புகைப்படம் ஒன்று அண்மையில் வைரலாகியது.

கேப்டர் மில்லர் படத்திற்கு பிறகு அவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியிருந்தாலும், அவருடைய மும்பை விஷிட் சம்பந்தமாக கேள்விகள் எழுந்திருந்தன. இந்நிலையில், தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது,  தனுஷ்  மீண்டும் பாலிவுட்டில் ஒரு படம் பண்ண இருக்கிறார். பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் மூன்றாவது முறையாக இவர் கூட்டணி அமைக்க இருப்பது தான் இந்த விசிட்டிற்கு காரணமாம்

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த தனுஷை ராஞ்சனா என்னும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றவர் தான் இயக்குனர் ஆனந்த் எல் ராய்.

இந்த படம் தமிழிலும் அம்பிகாபதி என்னும் பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ்,  சாரா அலிகான்,  அக்ஷய் குமார் ஆகியோரது கூட்டணியில் அத்ரங்கி ரே திரைப்படத்தை மீண்டும் இயக்கி வெற்றி கண்டார் ஆனந்த் எல் ராய்.

அடுத்தடுத்து இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் இணைந்து ரொமாண்டிக் திரைப்படத்தை கொடுத்த தனுஷ் தற்போது முழுக்க ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *