நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை கூறிய சோபிதா துலிபாலா

நாக சைதன்யாவுடன் காதலா? உண்மையை கூறிய சோபிதா துலிபாலா
  • PublishedJanuary 5, 2024

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மை என்ன என்பதை தெளிவு படுத்தியுள்ளார் சோபிதா.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா, இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

தன்னுடைய முதல் படத்திலேயே, நடிகை சமந்தாவுடன் ‘Ye Maaya Chesave திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு… பின்னர் காதலாக மாறியது.

பல வருடங்களாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்த சமந்தா – நாக சைதன்யா ஜோடி, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமந்தா திருமணத்திற்கு பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதுவே இவர்கள் இருவருக்கு இடையேயும் ஈகோவை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் திடீர் என விவாகரத்து பெற்று பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தனர்.

இவர்களது விவாகரத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் சமந்தா தொழில் ரீதியாக வளர்ச்சி அடைவதால் வந்த வினை தான் என்கிற காரணம் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், சமந்தாவை பிரிந்த ஒரே வருடத்தில்… நாகசைதன்யா பிரபல பாலிவுட் நடிகையும், பொன்னியின் செல்வம் பட புகழுமான சோபிதா துலிபாலாவை காதலித்ததாக கூறப்பட்டது.

இருவரும் வெளிநாடுகளில் இணைந்து எடுத்து கொண்ட, போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் இந்த செய்திக்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் கொடுக்காமல் இருந்தனர்.

ஆனால் தற்போது இதுகுறித்து முதன் முதலாக உண்மையை உடைத்து பேசியுள்ளார் சோபிதா துலி பாலா, இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது

“உண்மை என்ன என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும், தெரியாத தகவல்களை எழுதுபவர்களுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறன். நான் எந்த தவறும் செய்யாத போது அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும். எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என இந்த காதல் வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *