கமலுக்கும் – மணிரத்னத்துக்கும் சண்டையா? முதலில் நடந்தது என்ன?

கமலுக்கும் – மணிரத்னத்துக்கும் சண்டையா? முதலில் நடந்தது என்ன?
  • PublishedApril 30, 2024

கமல் ஹாசன் தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே கமலுக்கும், மணிரத்னத்துக்கும் சண்டை என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் காட்டுத் தீ போல் பரவியது.

தக் லைஃப் படத்தில் இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா.

இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நடந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்திருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே டெல்லியில் தொடங்கிய ஷூட்டிங்கில் கமல் ஹாசன் தாமதமாகத்தான் கலந்துகொண்டார் என்றும் அதற்கு காரணம் அவர் கதை விஷயத்தில் அதீத தலையீடு செய்வது மணிரத்னத்துக்கு பிடிக்கவில்லை எனவே இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “கமலுக்கும் மணிரத்னத்துக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று வதந்தியை கிளப்பிவிட்டார்கள். ஆனால் அது உண்மையில்லை. படத்தில் ஒரு பாடலை கமலே எழுதி பாடுகிறார். அதற்கான வேலைகளில்தான் அவர் இருந்தார். ஆனால் இது தெரியாமல் சிலர் கமலுக்கும், மணிரத்னத்துக்கும் சண்டை என்று கிளப்பிவிட்டுவிட்டனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *