ரஜினியின் மருமகளாக முதலில் நடிக்க இருந்தது சன் டிவி சீரியல் ஹீரோயினா?

ரஜினியின் மருமகளாக முதலில் நடிக்க இருந்தது சன் டிவி சீரியல் ஹீரோயினா?
  • PublishedFebruary 27, 2024

‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே தரமான வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘டாக்டர்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து, நெல்சன் திலீப் குமார் இயக்கிய ‘பீஸ்ட்’ மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், படு தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பின்னர் எப்படியும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில், தலைவர் ரஜினிகாந்தை வைத்து, நெல்சன் திலீப் குமார் இயக்கிய திரைப்படம் தான் ‘ஜெயிலர்’.

இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்தின் மருமகளாக, அதாவது மிர்ணா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது, பிரபல சன் டிவி சீரியல் ஹீரோயின் தானாம்.

சீரியல் மற்றும் படத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் இருந்ததால், சீரியலை விட்டு விலக மனம் இல்லாமல், இந்த பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

அவர் வேறு யாரும் இல்லை. சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் நாயகியாக நடித்து வரும், சைத்ரா ரெட்டி தான்.

ஒரு வேலை இந்த படத்தில் இவர் நடித்திருந்தால்… அவருக்கு இது சிறந்த அறிமுக படமாக அமைத்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Chaitra Latha Reddy
Kayal serial actress Chaitra Latha Reddy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *