இரண்டாம் பாகத்தில் கோட்டை விட்ட பொன்னியின் செல்வன்!

இரண்டாம் பாகத்தில் கோட்டை விட்ட பொன்னியின் செல்வன்!
  • PublishedApril 8, 2023

மணிரத்தினம் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

முதல் பாகத்தின் விறுவிறுப்பே இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாம் பாகம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. ஆனால் முதல் பாகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் இரண்டாம் பாகத்திற்கு இல்லை என்ற எண்ணம் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதாவது இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மிகப் பெரிய அளவில் மார்க்கட்டிங் செய்த படக்குழு இரண்டாம் பாகத்தை கண்டுக்கொள்ளாமல் இருப்பது போல் தோன்றுகிறது.

பொதுவாகவே ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்காக பெரிய அளவில் பிரமோஷன் செய்தால் மட்டுமே எளிதாக மக்களிடம் சென்றடையும். இப்படி இருக்கையில் தற்போது அசால்டாக இருப்பது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் டல் அடிக்க வைக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் ராஜமவுலி எடுத்த பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் குழு கொஞ்சம் பின்வாங்கி இருப்பது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *