உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்.. 16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா?

உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்.. 16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா?
  • PublishedJanuary 4, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 90 நாட்களை கடந்து நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இதற்கு முன்னதாக ஒளிபரப்பப்பட்ட ஆறு சீசர்களை விட இந்த ஏழாவது சீசன் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

90 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில் “மணி டாஸ்க்” ஒன்றை பிக் பாஸ் அறிமுகம் செய்தார்.

5 லட்சம் ரூபாய் ரொக்க தொகை வைக்கப்பட்ட நிலையில் அந்த தொகை கூடவும் செய்யலாம்? குறையவும் செய்யலாம்? என்ற ஒரு தகவலையும் பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். முன்னதாக சுமார் 13 லட்சம் ரூபாய் பணத்துடன் மூத்த நடிகை விசித்ரா அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இப்பொழுது, இன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 16 லட்சம் வரை அந்த “மணி டாஸ்க்” சென்றதாகவும், இறுதி நேரத்தில் பிரபல போட்டியாளர் பூர்ணிமா அவர்கள் அந்த 16 லட்சத்தோடு பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியதாக இப்பொழுது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *