ஐஷ்வர்யா ராயை வேண்டாம் என்று கூறிய பிரபு தேவா!

ஐஷ்வர்யா ராயை வேண்டாம் என்று கூறிய பிரபு தேவா!
  • PublishedApril 25, 2023

நடிகர் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளாராம். அப்படி ஒரு சுவாரஷ்யமான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

அதாவது,  பிரபுதேவா தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் சசி என்பவர் அவரிடம் கவிதை என்னும் பெயரிடப்பட்ட ஒரு கதையை சொல்லி இருக்கிறார். பிரபுதேவாவுக்கும் கதை ரொம்ப பிடித்துப் போனது.

இந்த படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் தாணு ஓகே சொல்லி இருக்கிறார் இதில் சசி படத்தின் டிசைனை ரெடி செய்து தாணுவிடம் காட்டி இருக்கிறார் அதில் சசியின் கவிதையை தயாரிக்கும் தாணு என்று இருந்திருக்கிறது.

இந்த டிசைன் பிரபுதேவாவை ரொம்பவும் கோபப்படுத்தி இருக்கிறது. அது எப்படி அறிமுக இயக்குனராக வருபவர் தன்னை முன்னிலைப்படுத்தி தாணு போன்ற ஒரு தயாரிப்பாளரை பின்னிலைப்படுத்துவது என்று கோபப்பட்ட பிரபுதேவா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

பின்னர் இந்த கதை தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியிடம் சொல்லப்பட்டு சொல்லாமலே என்னும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபுதேவா நடிக்க இருந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டபோது அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரபுதேவா நடிக்க மறுத்து விடவே படத்தின் கதாநாயகனாக லிவிங்ஸ்டன்இ கதாநாயகியாக கௌசல்யாவும் நடித்திருந்தார்கள். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *