மாரிசெல்வராஜ் படத்தில் பாடலை வேஸ்ட் செய்த ரஹ்மான்!

மாரிசெல்வராஜ் படத்தில் பாடலை வேஸ்ட் செய்த ரஹ்மான்!
  • PublishedMay 23, 2023

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் நகைச்சுவை புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடலுக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிலர் அந்த பாடலை வேறு யாராவது பாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

ஏனென்றால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்டா வரச் சொல்லுங்க என்ற பாடல் மிகப்பெரும் எழுச்சியாக இருந்தது.

அந்த அளவுக்கு இப்பாடல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வடிவேலுவை பாட வைத்து ஏ ஆர் ரகுமான் பாட்டை வேஸ்ட் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் வடிவேலு தான் இந்த பாட்டை பாட வேண்டும் என்பது இயக்குனரின் ஆசையாம். ஏனென்றால் இப்படத்தில் அவர் இறந்து விடுவாராம்.

அந்த வகையில் அவருடைய இறப்பிற்கு அவர் குரலிலேயே ஒப்பாரி பாடல் பாடினால் நன்றாக இருக்குமே என்று இயக்குனர் யோசித்திருக்கிறார்.

அதன் பிறகு தான் வடிவேலு இந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார். இருப்பினும் இது பற்றி சில கருத்துக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அவை எல்லாம் படத்தை பார்த்தால் மறைந்து விடும் என இயக்குனர் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *