மணிரத்தினத்திற்கு எதிராக ராஜமௌலி போட்ட திட்டம் : பிரமாண்டமாக உருவாகும் சரித்திர புராணம்!

மணிரத்தினத்திற்கு எதிராக ராஜமௌலி போட்ட திட்டம் : பிரமாண்டமாக உருவாகும் சரித்திர புராணம்!
  • PublishedMay 11, 2023

பிரமாண்டம் என்றாலே ராஜமௌலிதான். இவருடைய படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்நிலையில், அமரர் கல்கியின் நாவலை மணிரத்தினம் கையில் எடுத்து அதனை சிறப்பாக திரையில் கொண்டுவந்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக ராஜமௌலி ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.

அதாவது மகாபாரதம் கதையை ராஜமவுலி படமாக எடுக்க இருக்கிறாராம். மகாபாரதம் பல தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் ராஜமவுலி தனது கற்பனையில் மகாபாரத கதையை எடுக்க இருக்கிறாராம். ஆனாலும் கதையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்,  கதாபாத்திரங்களை மட்டுமே மேம்படுத்த உள்ளதாக ராஜமவுலி கூறி இருக்கிறார்.

அதுமட்டும் இன்றி பொன்னியின் செல்வன் போல மகாபாரதம் மிகப்பெரிய கதை. ஒரே பாகத்தில் எடுத்து முடித்து விட முடியாது. ஆகையால் ராஜமவுலி 10 பாகங்களாக மகாபாரத கதையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இப்போது மகாபாரத கதை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *