மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி!

மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி!
  • PublishedApril 10, 2023

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மாதவன், சித்தார்த், சூர்யா ஆகியோர் நடிப்பில் அவர் இயக்கிய ஆயுத எழுத்து படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் ஆயுத எழுத்து ஹீரோக்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் சஷிகாந்த் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள்.

மேலும் இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் டாப் நடிகையான நயன்தாராவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *