முன்னாள் காதலர் சல்மான் கானோடு ஐஸ்வர்யா ராய் நெருக்கம்? அவரே கொடுத்த பதில்

முன்னாள் காதலர் சல்மான் கானோடு ஐஸ்வர்யா ராய் நெருக்கம்? அவரே கொடுத்த பதில்
  • PublishedJuly 17, 2024

உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் மக்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி இருக்கும் அவர்; இப்போது பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.

ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

அதேசமயம் அந்த திருமணத்தில் ஒரு புகைப்படம் பரவியது. அதாவது ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலர் சல்மான் கானோடு இருக்கும்படியான புகைப்படம் வெளியானது. ஆனால் அது போலியானது. மேலும் சல்மானோடு மீண்டும் ஐஸ்வர்யா நெருக்கம் காட்டுகிறார் என்றும் தகவல் பரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், ‘அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான, ஒரு மகளுக்கு தாயான ஒரு பெண் குறித்து இப்படியா பேசுவது. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் அருவருப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *