பேரழிவைத்தந்த மிக்ஜாம் புயல்…. நன்கொடை வழங்கினார் சிவகார்த்திகேயன்

பேரழிவைத்தந்த மிக்ஜாம் புயல்…. நன்கொடை வழங்கினார் சிவகார்த்திகேயன்
  • PublishedDecember 10, 2023

மிக்ஜாம் புயல் – கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் – நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *