சஞ்சய்க்கு நோ சொன்னார் சிவகார்த்திகேயன்? கோடம்பாக்கத்தில் கிசுகிசு

சஞ்சய்க்கு நோ சொன்னார் சிவகார்த்திகேயன்? கோடம்பாக்கத்தில் கிசுகிசு
  • PublishedMarch 20, 2024

நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.

சமீபத்தில் துருவ் விக்ரம் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும், சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து சஞ்சய் கதை கூறியுள்ளார்.

ஆனால் சிவகார்த்திகேயன் இந்த கதை எனக்கு பொருந்தாது என்கிற காரணத்தை கூறி நிராகரித்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *