“கதை இருந்தால் படம் ஓடும்..” புதிய திரைப்படத்தின் பூஜையில் நடிகர் செந்தில் பேட்டி

“கதை இருந்தால் படம் ஓடும்..” புதிய திரைப்படத்தின் பூஜையில் நடிகர் செந்தில் பேட்டி
  • PublishedFebruary 23, 2024

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் புதிதாக நடிக்கும் படத்தின் பட பூஜை விழா போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கள் பகுதியில் நடைபெற்றது.

இதில் நடிகர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய படத்திற்கான பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்,

சிறிய படம் பெரிய படம் என்று நான் பார்ப்பதில்லை. படத்தில் கதை இருந்தால் அந்த படம் ஓடும். மேலும் தற்போது நடிக்கக்கூடிய படத்தின் கதை என்ன? கதாபாத்திரம் என்ன? என கேட்டபோது சிரித்தபடியே கதை சொல்லவில்லை படம் எடுத்த பிறகுதான் தெரியும் என அவர் பானியில் நகைச்சுவையாக கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அரசியல் குறித்த கேள்விக்கு பதில் கூற நடிகர் செந்தில் மறுத்து விட்டார். தற்போது கவுண்டமணி தனியாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் செந்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் தனியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

90, 80 காலப்பகுதிகளில் கவுண்டமணி – செந்தில் காமெடிகள் இல்லாத படம் இருக்காது என்றே கூறலாம். அந்த காலத்தில்இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்றால் மிகையாகாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *