தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்க ஆசைப்பட்ட தெலுங்கு நடிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்க ஆசைப்பட்ட தெலுங்கு நடிகர்கள்!
  • PublishedMay 15, 2023

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நடிக்கவும்,  தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் நடிக்கவும் உள்ள ஆசை மட்டும் மாறாமல் இருக்கிறது. தற்போது ஒரு படம் எடுக்கப்பட்டால் அந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாலம் என பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இதற்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அப்படியாக   தெலுங்கு நடிகர்கள் தமிழில் வந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஹீரோ, ஹீரோயின் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக நல்ல கதை, ஸ்கிரீன் பிளே என பல விடயங்களுக்கு ரசிகர்கள் முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அவ்வாறாக தமிழ் சினிமாவிற்கு வந்த சில நடிகர்களை பார்க்கலாம்.

நானி: இவர் ராஜமவுலி இயக்கத்தில் கிச்சா சுதீப்,  சமந்தா மற்றும் பலர் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி நேரடியாக தமிழில் அறிமுகமானார்.

பிரபாஸ்: இவர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 இல் பாகுபலி பார்ட் 2 வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றார்.

மகேஷ் பாபு: இவர் தெலுங்கு திரையுலகில் பிரின்ஸ் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிறந்து வளர்ந்து படித்தது என்னமோ சென்னையில் தான். ஆனால் நடிகராக வளர்ந்தது தெலுங்கு படத்தின் மூலம். அதனாலையே இவருடைய மிகப்பெரிய ஆசை பிறந்து வளர்ந்த ஊரிலேயே மிகப்பெரிய நடிகராக வளர வேண்டும் என்பதுதான்.

அந்த ஆசையில் தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர் படத்தின் மூலம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் இவருடைய ஆசை நிராசையாக போய்விட்டது.

அல்லு அர்ஜுன்: இவர் மற்றவர்களை போல் நேரடியாக தமிழ் படங்கள் மூலம் அறிமுகமாகாமல் புஷ்பா படத்தின் மூலம் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் அறிமுகமானார். 2021 இல் வெளிவந்த புஷ்பா படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

நாக சைதன்யா: இவர் தெலுங்கு நடிகரான நாகேஸ்வர ராவ் பேரன் மற்றும் நாக அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவர் மற்ற தெலுங்கு நடிகர்களை போல நாமும் எப்படியாவது தமிழில் கால் பதித்து விட வேண்டும் என்று மிகப்பெரிய ஆசையாக கனவு கோட்டை கட்டி இருந்தார். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். இருப்பினும் இந்த படம் வெற்றிப்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *