‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குனருக்கு கொலை மிரட்டல்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குனருக்கு கொலை மிரட்டல்!
  • PublishedMay 10, 2023

நாடு முழுவதும் கடந்த 5ஆம் திகதி  ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்து உள்ளது. இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *