ரஜினியால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. வேடிக்கை பார்க்கும் லைக்கா

ரஜினியால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. வேடிக்கை பார்க்கும் லைக்கா
  • PublishedFebruary 24, 2024

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படம் பல மாதங்களாக இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டது. ஆனால் தற்போது தான் தெரிகிறது விடாமுயற்சி படம் எதுனால இழுத்தடித்தது என்று.

அதாவது இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தின் ரஜினி மொகைதீன் பாய் கேரக்டரில் லால் சலாம் படத்தில் கமிட்டாகி விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வந்தது.

இந்நிலையில் இப்படத்திற்காக அதிக பொருட்செலவு செய்து வந்ததால் லைக்காவால் விடாமுயற்சி படப்பிடிப்பை யோசிக்க முடியாமல் போய்விட்டது.

அதன்பின் லால் சலாம் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் லைகா நிறுவனத்தினர் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்நிலையில் லால் சலாம் படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்க்கு வசூல் அளவில் வெற்றி பெறவில்லை. இதில் வணிக ரீதியாக தற்போது துவண்டு போயிருக்கும் லைக்காவால் மேற்கொண்டு விடாமுயற்சி படப்பிடிப்பை கொண்டு போக முடியவில்லை.

இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று மந்தமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் இப்படத்தை கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்த படத்தை கமிட் பண்ணி இருந்தார்.

இப்பொழுது இந்த படத்திலும் கவனம் செலுத்த முடியாமல் அஜித் பெரிய தலைவலியில் தவித்துக் கொண்டு வருகிறார்.

இதனால் அஜித்தின் விடாமுயற்சி படமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டிய படமும் கேள்விக்குறியாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *