இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரை வாழ்த்தினார் வைரமுத்து

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரை வாழ்த்தினார் வைரமுத்து
  • PublishedJanuary 20, 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார்

 இலங்கையில் ஏறுதழுவுதலை மீட்டெடுத்த ஆளுநரைப் பாட்டெடுத்துப் பாராட்டினேன் 

ஆளுநருக்கு மகா கவிதை வழங்கி மகிழ்ந்தேன் 

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ 

பாரதி சொன்னது அன்று; காரி்யம் நடப்பது இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *