தனது ஆஸ்தான இயக்குனரை ஒதுக்கிய விஜய் : இதுதான் காரணமா?

தனது ஆஸ்தான இயக்குனரை ஒதுக்கிய விஜய் : இதுதான் காரணமா?
  • PublishedMay 4, 2023

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளார். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான சம்பள பேச்சுவார்த்தைகளையும் அட்லியே பேசி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த கூட்டணி உடைந்துள்ளது.  அதாவது இந்த திரைப்படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்க்கு 150 கோடியும்,  அட்லீக்கு 30 கோடியும் சம்பளம் நிர்ணயித்திருந்தது.

ஆனால் அட்லீஇ நான் இப்போது பான் இந்தியா இயக்குனர். அதனால் எனக்கு 50 கோடி சம்பளம் வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.

இதனால் சன் பிக்சர்ஸ் அதிர்ந்து போனாலும் வேறு வழியின்றி விஜய் நடிக்க சம்மதித்ததே போதும் என்று அந்த சம்பளத்தை தர முன் வந்திருக்கிறது. ஆனாலும் இந்த கூட்டணி இப்போது இணையாமல் போய் உள்ளது.

ஏனென்றால் அட்லீ தன்னிடம் ஒரு வார்த்தை கூட இது குறித்து பேசாமல் தன் இஷ்டத்திற்கு செய்ததால் விஜய் அவர் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதனால் தற்போது வேறு ஒரு இயக்குனரை தேடும் வேட்டையில் சன் பிக்சர்ஸ் இறங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *