கேரளாவில் இரவிலும் அலை கடலென திரண்ட ரசிகர்கள்… எல்லா ஊர்லயும் நம்ம ஆளு தான் கெத்து

கேரளாவில் இரவிலும் அலை கடலென திரண்ட ரசிகர்கள்… எல்லா ஊர்லயும் நம்ம ஆளு தான் கெத்து
  • PublishedMarch 20, 2024

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார்.

படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் கேரளாவில் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் தற்போது கேரளாவில் தொடங்கி நடந்துவருகிறது. இதனையொட்டி விஜய் நேற்று முன் தினம் கேரளா சென்றார். அங்கு சென்ற அவருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விஜய் சென்றபோது சாலையின் இருபுறங்களிலும் ரசிகர்கள் நின்றிருந்தனர். அவரைத் தொடர்ந்து கேரளாவுக்கு சென்ற இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் விஜய் கேரளா சென்றதை அடுத்து நேற்றிலிருந்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டை அறிந்துகொண்ட ரசிகர்கள் அங்கும் ஆயிரக்கணக்கில் கூடினார்கள். இதனையடுத்து அங்கு இருந்த ஷூட்டிங் வேன் மீது ஏறிய விஜய் தன்னுடைய ஸ்டைலில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

அது அங்கிருந்த ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டாலும் விஜய் இதே ஃபார்முலாவைத்தான் கடைப்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *