அவருடன் நடிப்பீர்களா : செய்தியாளரின் கேள்விக்கு பத்திரகாளியாக மாறிய வரலட்சுமி!

அவருடன் நடிப்பீர்களா : செய்தியாளரின் கேள்விக்கு பத்திரகாளியாக மாறிய வரலட்சுமி!
  • PublishedMay 18, 2023

நடிகை வரலட்சுமி சரத்குமார் டாப் நடிகர்களின் படங்களின் நடித்து வந்தாலும் சிறிய பட்ஜெட் படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார்.

அவர் நடித்திருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் அது தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் வரலட்சுமி இடம் ஏடாகூடமான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் அப்பாவுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தின் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

டென்ஷனான வரலட்சுமி,  பத்ரகாளியாக மாறி கத்திவிட்டார். ஏனென்றால் படமாக இருந்தாலும் பெத்த தகப்பனுடன் எப்படி ஜோடி போட்டு நடிப்பது என்று வரலட்சுமி டென்ஷன் ஆகிவிட்டார்.

ஆனால் செய்தியாளர் அந்த கேள்வியை அப்படியே மழுப்பி,  ரஜினி,  விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா? என்று கேட்டார். ஏற்கனவே விஜய்க்கு வில்லியாக சர்கார் படத்தில் நடித்துவிட்ட வரலட்சுமி ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நடிகையாக இருக்கும் அவர்  இந்த ரோல் பண்ண மாட்டேன் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என்று சவால் விட்டிருக்கிறார். இதனாலேயே செய்தியாளர் அவ்வாறான ஒரு கேள்வியை கேட்டிருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *